Friday, October 27, 2017

விருச்சிக ராசிக்காரர்களே!.. இன்றைய ராகு கேது பெயர்ச்சி நன்மை தருமா?

விருச்சிக ராசிக்கு தற்போதுள்ள நான்கு, பத்தாம் இடங்களில் இருந்து சர்ப்பக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேதுக்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு இன்று மாறுகிறார்கள்.இம்முறை ராகு-கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு நன்மைகள் மட்டுமே இருக்கும் என்பது நிச்சயம்.
கடந்த சில ஆண்டுகளாக விருச்சிகராசியினர் ஏழரைச் சனியின் தாக்கத்தினால் கடுமையான நிலையை சந்தித்து கொண்டிருந்தார்கள்.
விருச்சிகத்தினரின் நிலை:
யாராவது ஒருவர் உங்களுடைய கஷ்டமான நிலைமையை பார்த்து உதவலாம் என்று முன் வந்தால் கூட, சாதகமற்ற கிரகங்களின் ஆதிக்கத்தினால் மனம் இருந்தும் உதவி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்.’
இதுபோன்ற உதவிகள் அற்ற நிலை இனிமேல் இல்லாத வண்ணம் கேட்கும் இடத்தில், உதவிகள் கிடைக்கின்ற ஒரு நிலையை தற்போது மூன்றாமிடத்திற்கு மாற இருக்கும் கேதுபகவான் உங்களுக்கு அருளுவார்.
பெயர்ச்சி:
ராகு- கேது பெயர்ச்சியை அடுத்து நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியால் உங்களின் யோகாதிபதியான குருபகவான் பனிரெண்டாம் இடம் மாறுவதால் நன்மை விளையும். இது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான நிலை என்று தான் சொல்ல வேண்டும்.
எல்லாவற்றையும் விட மேலாக விருச்சிக ராசியினர் அனுதினமும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப் பெயர்ச்சி இன்று நடக்கிறது. இனிமேல் உங்களுக்கு வரப் போகும் எல்லா நல்லவைகளையும் பெற்றுத் தரக் கூடிய ஆரம்ப மாற்றமாக இந்த ராகு-கேது பெயர்ச்சி இருக்கும்.
தன்னம்பிக்கை:
சர்ப்ப கிரகங்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களில் வருவதன் மூலம் உதவி ஸ்தானம் மிகுந்த வலுப்பெறும். இந்த இடம் தைரியம் மற்றும் கீர்த்தியை குறிப்பதால் இதுவரை எதற்கும் பயந்து கொண்டு தன்னம்பிகை இன்றி இருந்த விருசிகத்தினர் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள்.
எதிர்மறை எண்ணம்:
இதுவரை நடந்த எதிர்மறை பலன்களால் கலங்கிப் போய், எனக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது, ஏன் எனக்கு அனைத்திலும் தோல்வி கிடைக்கிறது, என்று தைரியம் இழந்து கலங்கித் தவித்துக் கொண்டிருக்கும்விருச்சிக ராசி இளைய பருவத்தினருக்கு, தைரியத்தையும், புத்துணர்ச்சியும் ஊட்டி அவர்களை சாதனை செய்பவர்களாக மாற்றும் வேலையினை மூன்றாமிடத்தில் மாறியிருக்கும் கேது செய்வார்.
ஒன்பதாம் இடம்:
ராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வருவது நன்மைகளைத் தராது என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், ராகு இப்போது செல்லும் இடம் அவருக்கு மிகவும் பிடித்த கடக வீடு என்பதால் பெரிய துன்பங்கள் எதையும் விருச்சிக ராசிக்கு நிச்சயமாக கொடுத்து விட மாட்டார்.
அதைவிட மேலாக கடந்த சில வருடங்களாக சனி கொடுத்துக் கொண்டிருக்கும் துன்பங்களை விட, வேறு எந்த ஒரு கிரகமும் அதிகமான தீமைகளையோ, மனக் கஷ்டங்களையோ விருச்சிகராசிக்கு கொடுத்து விட முடியாது.
தொழில் துறை:
வேலை அமைப்புகளில் இதுவரை நல்லது கிடைக்காத நிலைமை விருச்சிகத்திற்கு இருந்திருக்கும். அது மாறத் துவங்கி ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு நழுவிப் போன அனைத்து வாய்ப்புகளும் இப்போது தானே தேடி வரும்.
அதைவிட மேலாக ஏற்கனவே வாய்ப்புக் கிடைத்தும் அதை சரியாக செய்ய முடியாமல், கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிரகங்களால் கொடுக்கப்படுகிறது.
தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.
குடும்பம்:
கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.
குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள்.குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும்.
விசாகம்:
எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் நீங்கள் என்பதால் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே அதிகம் தரும்.
எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது உங்களுக்கு நடக்கும். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
அனுஷம்:
சனி பகவான் உங்கள் நட்சத்திர அதிபன் என்பதாலும் அவர் இன்னும் சில வாரங்களில் உங்கள் ராசியில் இருந்து விலகப் போவதாலும் மிகப் பெரிய கஷ்டங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இல்லை.
எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு இந்த வருடம் நன்றாகவே இருக்கும்.
கேட்டை:
வெளிநாட்டு தொடர்பால் இந்த வருடம் நன்மை அடைவீர்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வேலையில் பாராட்டப்படுவீர்கள். பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சிறிது குறைவான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரங்கள்:
ராகு கேது பெயர்ச்சி நடந்தபிறகு ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்பே காலஹஸ்திக்குச் சென்று இரவு தங்கி அதிகாலை எம்பெருமான் காளத்திநாதனுக்கும் அன்னை ஞானப் பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்புங்கள். நிறைந்த பலன் கிடைக்கும்.

நித்யானந்தா வலையில் வீழ்ந்த மற்றொரு பிரபல நடிகை... ஆசிரமத்தில் என்ன செய்கிறார் தெரியுமா?

சாமியாரான நித்யானாந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நடத்திய லீலைகள் குறித்த வீடியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

இந்த சம்பவம் இன்று வரை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தா நடிகைகளை தனது வலையில் வீழ்த்தி உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஞ்சிதாவை போல நடிகை கவுசல்யாவும் அவரது வலையில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஞ்சிதா கடந்த 1996ம் ஆண்டு காதல் வாழ்க படத்தில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து 50 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் அம்மா, அண்ணி, அக்கா வேடங்களில் தலைகாட்டி வந்தார்.

மேலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தீராத முதுகு வலி பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் குணமாகவில்லையாம்.

இதனால் சிலரின் ஆலோசனையின் பேரில் நித்யானந்தா ஆசிரமம் சென்று சில பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அதில் அவரது முதுகுவலி குணமானது. இதனால் தற்போது பிடதி ஆசிரமத்திலேயே தங்கியிருந்து சேவை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிறந்த மாதம் என்ன? உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது இதுதான்

ஒருவரின் பிறந்த மாதத்தை வைத்து அவர்களுக்கு எந்த எண் அதிர்ஷ்டத்தை கொடுக்கும், அவர்களுக்கான பலன்கள் எப்படி என்பதை பார்க்கலாம்.
ஜனவரி மற்றும் அக்டோபர்
ஜனவரி மற்றும் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண் 1 ஆகும். இவர்கள் ஏதேனும் ஒரு துறையில் நல்ல ஆராய்ச்சியாளராக வருவார்கள். இவர்களுக்கு மருத்துவ துறையில் அதிக பலன் கிடைக்காது.
ஆனால் இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றும் திறன் கொண்டவர்களாக திகழ்வார்கள்.
பிப்ரவரி மற்றும் நவம்பர்
பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண் 2 ஆகும். இவர்கள் சினிமா மற்றும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர்கள்.
கற்பனை வளம் அதிகம் கொண்டவரான இவர்கள், நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்படுவார்கள்.
மார்ச் மற்றும் டிசம்பர்
மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்களுக்கு மாத அதிர்ஷ்ட எண் 3 ஆகும். இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
இவர்களுக்கு நிர்வாகம், மருத்துவம், மார்க்கெட்டிங் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இவர்கள் யாருக்கும் பணிந்து செயல்பட மாட்டார்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 4 ஆகும். இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். சொந்த தொழில் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்.
மிகவும் நம்பிக்கையாளராக திகழும் இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக் கூடியவராக இருப்பார்கள்.
மே
மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 5 ஆகும். இவர்களுக்கு கல்வி நன்றாக வரும். இவர்கள் அரசியல், நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீதிபதியாகவும் பணியாற்றுவார்கள்.
ஆனால் இவர்கள் எப்போதும் தனிமையை அதிகமாக விரும்புவார்கள்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண் 6 ஆகும். இவர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண் 7 ஆகும். இவர்கள் கல்வி மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்கள்.
இம்மாதத்தில் பிறந்த சிலர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். அவசரம், வெறுப்பு உடையவர்கள். இவர்களை கண்டு பிறர் பயப்படுவார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 8 ஆகும். இவர்களுக்கு கல்வி சுமாராக அமையும்.
இவர்களுக்கு நண்பர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். இவர்கள் மிகவும் தனிமை பிரியர்கள். எதையும் தாமதமாகவே செய்வார்கள்.
செப்டம்பர்
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 9 ஆகும். இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். நிர்வாகத்துறை, நீதித்துறை, வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும்.


எதிலும் வெற்றி பெறக்கூடிய இவர்கள் அரிதான பல காரியங்களில் ஈடுபடுவார்கள்.

Thursday, October 26, 2017

இரண்டு நிமிடங்கள் உடலில் இதை மட்டும் பண்ணுங்க.. அதிசயத்தை உணருங்கள்!

நமது உடல் முழுக்க, முழுக்க இயற்கையாக உருவானது. இவ்வுடலுக்கு இயற்கையாக / செயற்கையாக எப்படி பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கான தீர்வை அதுவே அதனுள் வைத்திருக்கிறது.
நமது உடலின் பல இடங்களில் நமது உடல் உறுப்புகளை, அதன் செயற்திறனை ஊக்குவிக்கும் புள்ளிகள் இருக்கின்றன
இந்த புள்ளகளை தூண்டிவிட்டு அதன் மூலம் தீர்வு காண்பதை தான் நாம் அக்குபஞ்சர் மருத்துவ முறை என்கிறோம். இதன் மூலம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பயிற்சி அளித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இது முற்றிலும் செயற்கைத்தன்மை அற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மார்பின் மைய புள்ளியில் இரண்டு நிமிடம் தேய்த்துப் பயற்சி செய்வதால் என்ன பயன் என்பது குறித்து இனிக் காணலாம்...
இதய நலன் சிலருக்கு சில சமயங்களில் இதயம் படபடவென்று அடிப்பது போல ஓர் உணர்வு ஏற்படும். மேலும், இதை மாரடைப்பு என எண்ணியும் அவர்கள் அஞ்சுவது உண்டு. ஆனால், இது போன்ற உணர்வு ஏற்படுவது இதயம் துடித்தல் (Heart Palpitation) / நெஞ்சு துடித்தல் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பதட்டம் பெரும்பாலும் அதிகமாக மன அழுத்தத்துடன் காணப்படுபவர்கள். எதற்கெடுத்தாலும் பதட்டப்படுபவர்கள் மத்தியில் இது போன்ற உணர்வு அதிகமாக ஏற்படுகிறது.
இதனால், இவர்கள் அதிகளவில் நரம்பியல் சார்ந்தும், பதட்டம் சார்ந்தும் பாதிக்கப்படுகிறார்கள். தீர்வு! இதுப் போன்ற உணர்வு அதிகமாக ஏற்படுபவர்கள், இதை மிக எளிய அக்குபஞ்சர் வழியில் தீர்வுக் காணலாம்.
இதன் மூலம் உடல் முழுதிலுமான இரத்த ஓட்டம் சீராகி, உடற்திறன் மேம்படும். அமைதி! மார்பின் நடுவில் இருக்கும் இந்த புள்ளியில் அக்குபஞ்சர் பயிற்சி மூலமாக தூண்டுவதால் பதட்டம் குறையும், நரம்பு மண்டலம் வலுமையடையும், இதய கோளாறுகள் குறையும்.
இந்த புள்ளி, நடு இதய எலும்பின் கீழ் பாகத்தில் மூன்று கட்டைவிரல் அகல அளவில் அமைந்துள்ளது.
எப்படி செய்வது?
இந்த புள்ளியை தூண்டிவிட, இந்த புள்ளியில் 1-2 நிமிடங்கள் வரை விரல்கள் கொண்டு தேய்த்துக்கொடுக்க வேண்டும்.
மேலும், இந்த 1-2 நிமிடங்கள் நீங்கள் இழுத்து ஆழமாக, நிதானமாக மூச்சு விட வேண்டும். ஒரே மாதிரியாக மூச்சுவிட வேண்டும்.
நன்மைகள்!
இவ்வாவறு இந்த பயிற்சியில் ஈடுபடுவதால், இதய அழுத்தம், உணர்வு சமநிலை, நரம்பு மண்டலம், பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கலாம்.
மேலும், இது ஆஸ்துமா, இருமல், மார்பக தொல்லைகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது. குறிப்பு! இந்த பயிற்சியை நீங்கள் தினமும் கூட செய்துவரலாம்.
இது இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக்குவதால், மற்ற உடல் பாகங்களின் செயற்திறனும், ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

திருமணமான தம்பதிகள் செய்யவே கூடாத காரியங்கள்

நமது முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி, திருமணமான ஆண்கள், பெண்கள் ஒருசில விஷயங்களை மட்டும் செய்ய கூடாது என்று கூறியுள்ளனர்.
திருமணமான ஆண் பெண் செய்யக் கூடாத விஷயங்கள் என்ன?
  1. திருமணம் முடிந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு தாய், தந்தை இருந்தால், அவர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் செய்யக் கூடாது. உதிர்ந்த முடி, வெட்டிய நகத்தை வீட்டில் வைக்க கூடாது.
  2. ஆண் மற்றும் பெண்கள் எப்போதுமே இரண்டு கைகளை கன்னத்தில் வைத்தப்படி அமரவோ அல்லது நிற்கவோ கூடாது.
  3. ஆண் மற்றும் பெண்கள் உடுத்திய உடைகளை துவைக்காமல் கதவின் மேல் போடக் கூடாது. ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.
  4. திருமணம் முடிந்த ஆண் மறும் பெண் ஏதேனும் திருமண விழா, வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளுக்கு சென்று வந்த உடனேயே குளிக்கக் கூடாது.
  5. அன்றாடம் சாப்பிடும் போது, உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக் கூடாது.
  6. கோவிலில் விழுந்து வணங்கும் போது, அங்கப்ரதக்ஷிணம் செய்யும் போது மார்பு பூமியில் படும்படி வணங்க கூடாது.
  7. திருமணம் முடிந்த பெண்கள் எப்போதுமே மஞ்சள் கயிற்றில் மட்டுமே தாலியை அணிய வேண்டும். மேலும் பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டப்படி நடக்கக் கூடாது.
  8. கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும். மேலும் கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ள கூடாது.
  9. திருமணமான பெண்கள் காலில் ஒருவிரலில் மட்டுமே மெட்டி அணிதல் வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று விரல்களில் மெட்டி அணிதல் மற்றும் தெற்கே பார்த்து நின்றபடி கோலம் போடக் கூடாது.
  10. கர்ப்பமான பெண்கள் உக்கிரமான தெய்வங்களின் கோவில்களுக்கு செல்லக் கூடாது.
  11. அமாவசை மற்றும் தவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!!

முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேசளவில் கவனம் பெற்றது.
இவரது மனைவி நீட்டா அம்பானியும் இந்தியாவில் பிரபலமான பெண் தொழிலதிபர். விளையாட்டு துறை சார்ந்த நடவடிக்கைகளில் நீட்டா அம்பானியின் பங்கு மிகப்பெரியது.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் முகேஷ் அம்பானியின் வாழ்க்கை ஆடம்பரத்தின் உச்சம்.
ஆனால் அந்த ஆடம்பரத்தை முகேஷ் அம்பானி பொது விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம் அவரிடம் பார்க்க முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் முகேஷ் அம்பானி ஆடம்பரங்களின் அரசன்.
தென் மும்பை பகுதியில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அன்டிலியா என்ற பிரம்மாண்ட வீடு, உலகளவில் இருக்கும் ஆடம்பரமான கட்டிடங்களில் ஒன்று.
மும்பையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீடு, தற்போது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாறி வருகிறது.
மொத்தம் 27 அடுக்குகள் கொண்ட முகேஷ் அம்பானியின் அன்டிலியா கட்டிடத்தில் சுமார் 6 தளங்கள் மட்டும் கார்களை நிறுத்துவதற்காகவே கட்டபட்டுள்ளது.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கார்கள், உலகின் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர மாடல்களாகும்.
வெறும் கார்களை பார்க்கிங் செய்யப்படும் தளங்களாக மட்டுமில்லாமல், அதற்கான மொத்த மெக்கானிசத்தையும் அன்டிலியா வீட்டின் அந்த 6 தளங்கள் பெற்றுள்ளன.
இங்கு முகேஷ் அம்பானி மட்டுமில்லை, அவரிடம் பணிப்புரியும் கார் ஓட்டுநர்கள் கூட நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்கள் தான்.
அதாவது எம்பிஏ படித்துவிட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் சம்பாதிக்கும் ஊழியர்களை விட,முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுநர்கள் வாங்கும் ஊதியம் மிக அதிகம்.
அதாவது மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஓட்டுநர்கள் வரை முகேஷ் அம்பானியிடம் பணிபுரிகிறார்கள். அதிலும் குறிப்பாக அவரது பிரத்யேக கார் ஓட்டுநருக்கு மற்றவர்களை விட அதிக ஊதியம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கார் ஓட்டுநர்களுக்கா இவ்வளவு ஊதியம் என நம்மில் பலருக்கு ஆதாங்கம் எழலாம். ஆனால் முகேஷ் அம்பானி வைத்திருக்கும் கார்களை ஓட்டுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
முகேஷ் அம்பானி வீட்டில் இருக்கும் கார்கள் பலவும் அதிக விலையுயர்ந்த மற்றும் நுணுக்கமான வேலைபாடுகளை கொண்ட தயாரிப்புகள்.
அவற்றில் ஏதாவது ஒரு கோளாறு ஓட்டுநரால் ஏற்படால், அதை சரிப்படுத்த லட்சம் லட்சமாக கொட்ட வேண்டும். குறிப்பாக ஒரு சில கார்களில் கோளாறு அல்லது கீறலோ விழுந்தால் கூட அது சரி செய்ய முடியாமல் கூட போகலாம்.
முகேஷ் அம்பானி மட்டுமில்லாமல், அவரது காரின் உயிரும் அதன் ஓட்டுநரின் கையில் தான் என்றால், அதற்கு ஏற்றவாறு ஊதியமும் இருக்க வேண்டாமா?
drivespark.com









சிறுமியின் வாழ்வை பாழாக்கிய ஆன்லைன் ஆபாச தாக்குதல்கள்

ஆபாச செய்தி மற்றும் புகைப்படங்களில் தனது புகைப்படம் திணிக்கப்பட்டு அவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் தனது வாழ்வு பாழாகியிருப்பதாக ஓர் இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
லைவ்.மீ எனும் தொடர் நேரலை சமூக வலைதள ஆப் ஒன்றில் 'போ போய் உன்னை நீயே கொன்றுவிடு' என்றும் 'கொள்ளையடிக்கப்பட வேண்டிய வீடு' என குறிப்பிட்டு அவரது வீட்டு முகவரி டிவிட்டரில் பகிரப்பட்டது.
பிபிசிக்கு கிடைத்த புள்ளிவிவரங்களின்படி தீங்கிழைக்கும் தகவல்களை அனுப்புதல் குறித்த அறிக்கைகளில், ஒரு நாளில் இருநூறுக்கும் அதிகமான இது போன்ற தகவல்களை அனுப்பும் செயல் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ல் இந்த குற்றங்களின் எண்னிக்கை 79,372. அதற்கு ஓராண்டுக்கு முன்னதாக இந்த எண்ணிக்கை 42,910 ஆக இருந்தது.
பதினெட்டு வயதான விக்டோரியா லைவ்.மீ, ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கைத் தொடங்கியுள்ளார். அங்கே அவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்துள்ளனர்.
தனது புகைப்படத்தை வைத்து கிராபிக் செய்யப்பட்ட ஆபாசமான புகைப்படங்கள் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும், அவரது வீட்டின் புகைப்படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டதாகவும் விக்டோரியா கூறுகிறார். அதே வேளையில் 'மரணித்துவிடு' என இன்னொரு செய்தி அவருக்கு வந்ததாக குறிப்பிடுகிறார்.
'' அவை எனது தன்னம்பிக்கையை குலைத்தன. நான் அந்த வீட்டை விட்டுக்கூட வெளியே செல்லமாட்டேன். நான் இப்போது பதற்றத்தை தணிப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வருகிறேன்'' என்கிறார் விக்டோரியா.
'' நான் வெளியே சென்றால் அவர்கள் அங்கே இருப்பார்களா என்பது எனக்குதெரியாது. இந்த எண்ணம் இன்னும் என் மனதின் பின்னால் இருக்கிறது . முடிவாக இந்த விஷயங்கள் எனது வாழ்க்கையை பாழாக்கியிருக்கின்றன. நான் மற்றவர்களுடன் எளிதில் பழகக்கூடிய நபர், நான் மீண்டும் பழைய ஆளாக மாற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் '' எனச் சொல்கிறார் விக்டோரியா.
துயரத்தையும் பதற்றத்தையும் தந்த இணையத்தில் வந்த தீங்கிழைக்கும் தொடர்புகள் குறித்து காவல்துறையை அணுகினார். ஆனால் யாரையும் அவர்கள் கைது செய்யவில்லை.
'' சில நேரங்களில் இது என்னுடைய தவறோ என உணர்வேன். ஆனால் இணையத்தில் மக்கள் எளிதில் இலக்கு வைக்கப்படுகிறார்கள் . புதிய நண்பர்களை உருவாக்குவது கேளிக்கைக்கான ஒன்று என நான் நினைத்தேன். ஆனால் அது இப்படி திரும்பும் என எப்போதும் எண்ணியதில்லை '' என்றார் அந்த பதினெட்டு வயது பெண்.
''மேற்கு யார்க் ஷைர் காவல்துறையினர் விக்டோரியா விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்துடன் அதிகாரிகள் தொடர்ச்சியாக இணைப்பில் இருந்து வருகிறார்கள் மேலும் அவர்களுக்கு விசாரணையின் நிலவரங்கள் குறித்து தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள் '' என்கிறார் காவல்துறை மேலதிகாரி டேவிட்ஸன்.
ஆன்லைன் பயனாளர்களை பாதுகாக்க சமூக வலைதள நிறுவனங்கள் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் தேசிய அளவில் டிஜிட்டல் குற்றங்கள் குறித்து கையாளும் டிஜிட்டல் காவல்துறை வாரியத்தின் தலைவர்.
நாம் எப்படி சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறோம் என்பதற்கும் கடும் விமர்சனங்கள் அங்கே அதிகரிப்பதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறார் ஷிஃபீல்டு ஹாலம் பல்கலைக்கழகத்தில் தடயவியல் குறித்த உளவியல் பிரிவு மூத்த விரிவுரையாளரான டாக்டர் மிக்கேல் நியூபெர்ரி.
''தங்களது மொபைலை உடன்வைத்திருக்காத மக்கள் வழக்கத்திற்கு மாறானவர்களாக ஆகிவிட்டார்கள். இந்நாட்களில் நமக்கு எல்லாமே உடனடியாக கிடைத்து விடுகிறது'' என்கிறார் நியூபெர்ரி.
தவறான முறையில் பயன்படுத்தப்படும் வெறுக்கத்தக்க புகைப்படங்கள் மற்றும் ஆபாச படங்களின் மீது புது கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்களை வைத்திருப்பதாக டிவிட்டர் முன்னதாக கூறியுள்ளது.
- BBC - Tamil

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்: நாட்டு ஜனாதிபதியிடம் முன்வைத்த உருக்கமான கோரிக்கை

வெனிசுலாவில் பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருணைக்கொலையால் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நாட்டின் ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளார்.
வெனிசுலாவின் கபுடரே பகுதியில் வசித்து வரும் மார்கோ கில்லன்(45) என்பவரே குறித்த கோரிக்கை மனுவை சமூக ஊடகம் வாயிலாக விடுத்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் வாகன விபத்து ஒன்றில் சிக்கிய கில்லன், அதன் பின்னர் உடல் முழுவதும் செயலிழந்து பக்கவாதத்தால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளானார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வீடியோ ஒன்றை பதிவு செய்த கில்லன், தாம் ஒரு பொருளாதார மேதை இல்லை எனவும், ஆனால் நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழல், தன்னைப் பொன்ற நபர் ஒருவருக்கு உணவு மற்றும் கடுமையான மருத்துவ செலவினங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைப் போன்ற நபர் ஒருவரை கடந்த 12 ஆண்டுகளாக கவனித்து வந்ததால் எனது தாயார் உயிரிழந்தார் என எனது சுற்றத்தார் உள்ளிட்ட பலபேர் குற்றஞ்சாட்டலாம்.
இனிமேலும் எனது குடும்பத்தாரை சோதனைக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை. ஆதலால் தயைக் கூர்ந்து மிகவும் கண்ணியமான வழியில் உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என வெனிசுலா ஜனாதிபதியை கில்லன் கேட்டுக் கொண்டுள்ளார்.



ஹீரோவாக பிக்பாஸ் ஆரவ்வின் முதல் படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
விஜய்பார்கவி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகனம்! அதிர்ச்சியில் இந்தியா

இலங்கையிலுள்ள நடைமுறையில்ல முச்சக்கர வண்டிக்கு மாற்றீடாக வேறு வாகனம் ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான புதிய நடைறைமுறையை இலங்கை முன்னெடுத்தால், இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றிய கருத்தினை அடிப்படையாக கொண்டு இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக மாற்று நடவடிக்கையாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள பஜாஜ் Qute என்ற வாகனம் இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த வாகனம் மோட்டர் வாகனமாக காணப்படாதெனவும், முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் என்ஜின் திறன் 216.6 CC ஆக உள்ளதெனவும், Qute வாகனத்தின் நீளம் 2752 மில்லிமீற்றராகவும், அகலம் 1312 மில்லி மீற்றராகவும் காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதன் உயரம் 1652 மில்லி மீற்றர் எனவும், 4 பேர் வசதியாக பயணிக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.

Wednesday, October 25, 2017

கருப்பு புள்ளி விழுந்த அசிங்கமான வாழைப்பழத்தில் தான் அதிஷ்டம்!

பழுத்த அல்லது கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டுவிட்டது என எண்ணி நம்மில் பலர் தூக்கி எறிவது. சிலர் அதை அருவருப்பாகவும் காண்பார்கள்.

ஆனால், உண்மையில் கருப்பு புள்ளி இல்லாத வாழைப்பழத்தைவிட, கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் தான் ஆரோக்கியமானது என பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்!
வாழைப்பழத்தில் டிரிப்டோபென் அதிகமாக இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களால், இயற்கையான முறையில் தேவையான அளவு செரோடோனின் சுரக்க வைக்க முடியாது.

கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் உண்பதன் மூலம் டிரிப்டோபென், செரோடோனினாக மாற்றப்பட்டு, மன அழுத்தம் குறையவும் உதவுகிறது.

உடற்சக்தி!
எல்லா பழங்களிலும் அதிகமாக இயற்கை சர்க்கரை அளவு இருக்கிறது. ஆனால், வாழைப்பழத்தில் தான் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்றின் கலவையும் அதிகமாக இருக்கிறது.

இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கிறது. மேலும், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் உதவுகிறது.

மூளை நலன்!
தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால், மூளைக்கு தேவையான அளவு சக்தி கிடைக்க பெறுகிறது.

இதில் இருக்கும் அதிகளவிலான பொட்டாசியம் நியூரல் செயல்திறனை, செல்லுலார் செயல்பாட்டினை சீராக்குகிறது.

காபி வேண்டாம்!
இடைவேளையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு பதிலாக ஒரு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடலாம். இது, உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

இரத்த அழுத்தம்!
தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் குறைந்த இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் இதய நலனை மேம்படுத்த உதவுகிறது.

இரத்தமும், எலும்பும்!
இதில் இருக்கும் உயந்த அளவிலான வைட்டமின் மற்றும் கனிம சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனை ஊக்குவிக்கிறது. மேலும், இரத்த சுழற்சி மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகப்படுத்துகிறது.

கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பின் அடர்த்தியை சீராக்குகிறது. மேலும், இரத்த சோகை மற்றும் குறைந்த வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை உண்டாகாமல் காக்கிறது.

நோய் எதிர்ப்பு!
வாழைப்பழத்தில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து, இதய நோய், புற்றுநோய் மற்றும் தசை கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது.

பல பெண்களுடன் உறவு வைத்த பிரபல நடிகர்..! கடைசியில் என்ன செய்தார் தெரியுமா?

பாலிவுட் நடிகரான நவாஸுத்தீன் சித்திக்கின் மனைவி அஞ்சலி மற்றும் அவரது குழந்தைகளை பற்றி தான் நமக்கு தெரியும்.
ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது. இந்நிலையில் நவாஸ் தனது வாழ்க்கை பற்றி ”ஆர்டினரி லைப்” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் அவர், மிஸ் லவ்லி படத்தில் நடித்த போது நிஹாரிகா சிங் அவர் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார்.
அப்போது வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஹாரிகா மிகவும் அழகாக இருந்தார். உடனே அவரை படுக்கை அறைக்கு அழைத்து சென்று உறவு வைத்து கொண்டோம். அதன் பிறகு அவருடன் ஓன்றரை ஆண்டுகள் இருந்தேன்.
பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றேன். அங்கு பணிபுரிந்த பெண் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். இதனையடுத்து நாங்கள் இருவரும் அன்று இரவு ஒன்றாக இருந்தோம்.
பிறகு யூத பெண்ணான சூசனை காதலித்தேன் அவரை திருமணம் செய்ய விரும்பிய போது அவரது சகோதரனுக்கு விவகரத்து நடந்ததால் அவருக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது.
சூசனுடனான உறவு நிஹாரிகாவுக்கு தெரிய வந்ததால் அவர் என்னிடம் கெஞ்சி அழுதார். மேலும் தன் முதல் காதலியின் பெயர் சுனிதா என்றதோடு அவருடன் காதல் முறிந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றேன் .
பிறகு தன் மனதை மாற்றிகொண்டேன் என அந்த புத்தகத்தில் நடிகர் குறிப்பிட்டுள்ளார்.

15 வயது சிறுமி காதல் மோகத்தால் வாலிபருடன் செய்த காரியம்.! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்...

திரிபுரா மாவட்டத்துக்கு உட்பட்ட ராதா நகரை கிராமத்தை சேர்ந்தவர் பிஸ்வஜித் பிஸ்வாஸ்.
பிஸ்வஜித் மற்றும் அக்கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியான தாராமணி பில் இருவரும் காணாமல் போனார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்களை பொலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பிஸ்வஜித் பிஸ்வாஸ் வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தில் இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.