Thursday, October 26, 2017

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்: நாட்டு ஜனாதிபதியிடம் முன்வைத்த உருக்கமான கோரிக்கை

வெனிசுலாவில் பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருணைக்கொலையால் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நாட்டின் ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளார்.
வெனிசுலாவின் கபுடரே பகுதியில் வசித்து வரும் மார்கோ கில்லன்(45) என்பவரே குறித்த கோரிக்கை மனுவை சமூக ஊடகம் வாயிலாக விடுத்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் வாகன விபத்து ஒன்றில் சிக்கிய கில்லன், அதன் பின்னர் உடல் முழுவதும் செயலிழந்து பக்கவாதத்தால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளானார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வீடியோ ஒன்றை பதிவு செய்த கில்லன், தாம் ஒரு பொருளாதார மேதை இல்லை எனவும், ஆனால் நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழல், தன்னைப் பொன்ற நபர் ஒருவருக்கு உணவு மற்றும் கடுமையான மருத்துவ செலவினங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைப் போன்ற நபர் ஒருவரை கடந்த 12 ஆண்டுகளாக கவனித்து வந்ததால் எனது தாயார் உயிரிழந்தார் என எனது சுற்றத்தார் உள்ளிட்ட பலபேர் குற்றஞ்சாட்டலாம்.
இனிமேலும் எனது குடும்பத்தாரை சோதனைக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை. ஆதலால் தயைக் கூர்ந்து மிகவும் கண்ணியமான வழியில் உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என வெனிசுலா ஜனாதிபதியை கில்லன் கேட்டுக் கொண்டுள்ளார்.



No comments:

Post a Comment