மேட்டுப்பாளையம் அருகே இளம் பெண் ஒருவர் காதலரால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஹைதர் அலி என்பவரின் 21 வயது மகள் ரிஸ்வான். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர் கடந்த 16 ஆம் தேதி முதல் காணாமல் போனதை அடுத்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாந்த் என்பவரை ரிஸ்வான் காதலித்தது தெரிய வந்தது. இதனையடுத்து, பிரசாந்திடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, கல்லார் பகுதியில் மலையிலிருந்து கீழே தவறி விழுந்து ரிஸ்வான் உயிரிழந்தாகக் கூறினார்.
ஆனால், ரிஸ்வான் உடலில் உடைகள் இல்லாததும் காயங்கள் இருப்பதும் அவர் கொலை செய்யப்பட்டு இறந்தாரா என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது, ரிஸ்வானை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பிரசாந்த், அவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு வெளியே தெரியாமல் இருக்க முட்புதரில் உடலை கற்களை கொண்டு மூடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment