இந்தோனேசியாவில் திருமணத்துக்கு முன்னர் பெண்ணாக இருந்த ஒருவர் திருமணத்துக்கு பின்னர் வந்த கனவையடுத்து ஒரே நாளில் ஆணாக மாறியிருக்கிறார்.
இந்தோனேசியாவின் ஜேம்பர் மாகாணத்தை சேர்ந்தவர் பாடோலி (21) இவருக்கும் ஆயூ பூஜி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த யூலை மாதம் 19-ஆம் திகதி திருமணம் நடந்தது.
புதுமண தம்பதியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென கடந்த மாதம் தான் ஆணாக மாறி விட்டதை உணர்வதாக கணவரிடன் ஆயூ கூறியுள்ளார்.
இதை கேட்ட பாடோலி அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆணாக தான் மாறிய அதிர்ச்சி காரணத்தையும் ஆயூ கூறியுள்ளார். அவர் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் ஒரு இரவில் என் கனவில் மாய உயிரினம் தோன்றியது. அதோடு ஒரு முட்டையும் கீழே விழுந்தது.
தூக்கத்திலிருந்து காலை எழுந்தவுடன் என் பாலினம் ஆணாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். சிலர், ஆயூ பிறப்பிலிருந்தே ஆண் தான் எனவும் தற்போது ஆணாக மாறியதாக பொய் கூறுகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர்.
இதை ஆயூ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆயூவுக்கு பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய பாடோலி முடிவெடுத்த நிலையில், சிகிச்சைக்கு பணமில்லாததால் திட்டத்தை அவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.

பாடோலி கூறுகையில், ஆயூ பெண்ணாக மாறவில்லையெனில் அவரை விவாகரத்து செய்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிசாரிடம் எல்லாவற்றையும் தம்பதிகள் கூறியுள்ள நிலையில், உண்மையை அறிய பொலிசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment