Tuesday, October 24, 2017

சீரகத்தை வாயில் போட்டு நீர் குடியுங்கள்: அப்பறம் பாருங்க

சமையலில் பயன்படுத்தப்படும் சீரகத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதை எப்படி பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சீரகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
  • சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கும்.
  • திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர ரத்த அழுத்தத்தப் பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்.
  • அகத்திக் கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மனநோய் மற்றும் செரிமான பிரச்சனை குணமாகும்.
  • சீரகத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மந்தநிலை குணமாகும்.
  • சீரகத்தை எலுமிச்சை சாற்றில் உலர்த்தி, தூளாக இடித்து அதில் தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு மோர் குடித்து வர மார்பு வலி நீங்கும்.
  • மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு ஆகியவை சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
  • சீரகம், இஞ்சி ஆகிய இரண்டையும் எலுமிச்சை பழச்சாறில் ஊறவைத்து அதில் தினமும் இருவேளை 3 நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குணமாகும்.
  • சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகும்.
  • சிறிது சீரகத்துடன், 2 வெற்றிலை, 4 மிளகு ஆகியவை சேர்த்து மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
  • ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து, சாப்பிட்டு வர, பேதி மற்றும் வயிற்றுப்போக்கு குணமாகும்.
  • சீரகத்துடன், கீழாநெல்லி சேர்த்து அரைத்து, அதில் எலுமிச்சை சாறு சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
  • சீரகத்தை லேசாக வறுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

No comments:

Post a Comment