நகைச்சுவை நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கே உண்டான பாணியில் முத்திரையை அழுத்தமாக பதித்தவர் நடிகர் நாகேஷ்.
இவரது கொமடிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பலத்த வரவேற்பு உண்டு. ஆனால் வெள்ளித்திரையில் அனைவரையும் சிரிக்க வைத்த நாகேஷின் சொந்த வாழ்க்கை மிகவும் சோகமாக முடிந்தது.
நாகேஷ் வேறு மதத்தைச் சேர்ந்த ரெஜினா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவரது வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்பு ஒரு சமயம் விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரினை வாங்கிக் கொண்டு ஆசையாக தனது அம்மாவை பார்க்க வந்தவருக்கு அந்த ஆசை நிராசையாகிவிட்டது.
ஏனென்றால் அவர் சென்ற பொழுது அவரது அம்மாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். இப்படி தனது வாழ்வில் அடுத்தடுத்த பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார் நடிகர் நாகேஷ்.
இவரது மிகப்பெரிய கனவு தனது மகன் ஆனந்த் பாபுவை சினிமாவில் பெரிய ஆளாக கொண்டு வர வேண்டும் என்பதே... தனது மகனை வைத்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தினை தயாரித்து இயக்கினார்.
ஆனால் அதுவரை தான் சேர்த்து வைத்திருந்து பணத்தினை எல்லாம் இழக்கும் படமாக அப்படம் அமைந்துவிட்டது. அப்படத்தின் நஷ்டத்தால் பெரிய கடனில் மாட்டிக்கொண்ட இவருக்கு பல நோய்கள் தாக்க ஆரம்பித்துவிட்டது.
அதுமட்டுமின்றி சில படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருந்த தனது மகனிற்கு தோல்வி ஏற்பட குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை எண்ணி மனம் மிகவும் வேதனைப்பட்டார். இதுவே நடிகர் நாகேஷின் நோயினை தீவிரப்படுத்தியது.
சர்க்கரை நோய், இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2009ம் ஆண்டு காலமானார். தனது மகனை பெரிய ஹீரோவாக ஆக்க வேண்டும் என்று கனவு கண்டவர், அந்த மகனே முழு நேர குடிபோதைக்கு ஆளானதால் அந்த புகழ்பெற்ற நடிகரையும் குடிபோதை குடித்துவிட்டது...
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க...
-
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவ...
-
பழுத்த அல்லது கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டுவிட்டது என எண்ணி நம்மில் பலர் தூக்கி எறிவது. சிலர் அதை அருவருப்பாகவும் காண்பார்கள். ...
-
மேஷம்-செலவு ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-வரவு கடகம்-தடங்கல் சிம்மம்-நன்மை கன்னி-சுகம் துலாம்-பெருமை விருச்சிகம்-விவேகம் தனுசு-கீர்த்தி ...
-
முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின...
-
மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்த பெண், தேவாலயத்தில் வைத்து தனது மேற்சட்டையைக் கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மெரியானா மில்வார்ட...
No comments:
Post a Comment